தமிழகத்தின் வேலையில்லா திண்டாட்டம் வெட்டவெளிச்சம்: ப.சிதம்பரம்
சென்னை
2 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்தது உலகில் எங்குமே நடக்காத சாதனை என்றுகாங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நிருபர்களிடம்அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசியர்கள்உலகில் எங்குமே டிஸ்மிஸ் செய்யப்பட்டதில்லை. அந்த வகையில் இந்த அரசு பெரும் சாதனையே படைத்துவிட்டது.
ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்த முடிவுகளை மறு பசீலனை செய்யும் அதிகாரம் அடுத்து வரும்அரசுக்கு இருப்பதை அதிமுகவினர் மறந்து விடக் கூடாது.
பல்வேறு நிபந்தனைகளுடன், தற்காலிக வேலைக்கு ஆள் எடுக்கும் நிலையிலும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் கூடி நிற்பதைப் பார்க்கும் போதுதமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பது தெளிவாத் தெரிகிறதுஎன்றார் சிதம்பரம்.