காமராஜர் நூற்றாண்டு பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்
சென்னை:
பெருந்தலைவர் காமராஜரின் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழாவையொட்டி தமிழகம் எங்கிலும் காங்கிரஸார்கொண்டாடி வருகிறார்கள்.
விருதுநகரில் உள்ள காமராஜர் சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலைஅணிவித்தனர்.
தி.நகரில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்குச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன்,சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந் நிகழ்ச்சிகளில் மூத்த தலைவர்கள் அன்பரசு, தங்கபாலு, அருணாச்சலம் போன்றோரும் கலந்து கொண்டனர்.
விருதுநகல் இன்று மாலை பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில்காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications