மதிமுகவினருக்கு விடுதலை இல்லை: பொடா நீதிமன்றம் மறுப்பு
சென்னை
பொடா வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி 8 மதிமுகவினர் தொடர்ந்த மனுவை பொடா நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி வைகோ தவிர மற்ற 8 பேரும்பொடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் இன்று தீர்ப்பை வழங்கினார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பான மற்றொரு வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால்,8 பேரையும்விடுவிக்க இயலாது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 9 பேரின் காவலையும் வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications