ஓ.பியின் வைர பிரேஸ்லெட் காணாமல் போய் மீட்பு!
சென்னை:
அமைச்சர் பன்னீர் செல்வத்தின் வைர பிரேஸ்லெட் காணாமல் போய் திரும்பக் கிடைத்துள்ளது.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடந்த வாரம் திருப்பதிக்கு சென்றார். திருமலையிலுள்ளபயணியர் விடுதியில் தங்கியிருந்தபோது அவரது வைரங்கள் பதித்த பிரேஸ்லெட் காணாமல் போய்விட்டது.
அறையெங்கும் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காததால் திருமலை தேவஸ்தான நிர்வாகிகளிடம் தகவல்தெரிவித்துவிட்டு பன்னீர் சென்னை திரும்பினார். இதை போலீசில் புகார் கொடுக்க விரும்பவில்லை எனபன்னீர்செல்வம் கூறிவிட்டார்.
இந்நிலையில், அந்த பிரேஸ்லெட் திரும்பக் கிடைத்துள்ளது. அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில்பிரேஸ்லெட் கிடந்தது. தை துப்புறவுத் தொழிலாளி கண்டெடுத்து திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம்ஒப்படைத்தார்.
இதையடுத்து சென்னை வந்த தேவஸ்தான அதிகாரிகள் வைர பிரேஸ்லெட்டை பன்னீர்செல்வத்திடம்ஒப்படைத்துள்ளனர்.