கள்ளத் தொடர்பு: 5 பேர் கொண்ட குடும்பமே தற்கொலை
கும்பகோணம்:
மனைவியில் கள்ளக் காதல் விவகாரம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). தனியார் கேபிள் டிவியில் வேலை செய்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மாலதி(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு காயத்ரி (14), சக்தி (11), கார்த்தி(7), கவுசல்யா(4)ஆகிய நான்கு குழந்தைகள்.
இந் நிலையில், மாலதிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்துமுருகனுக்கும் மாலதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது.
இதையடுத்து அண்டை வீட்டினர் கூடி வந்து மாலதியை கண்டித்துவிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவங்களால் மனம்வெறுத்துப் போன முருகன், நேற்று காலை மொட்டையடித்துக் கொண்டு மகாமகம் குளத்தில் குளித்துவிட்டுவீட்டுக்கு வந்தார். வரும்போதே குளிர்பானத்தையும் விஷத்தையும் கொண்டு வந்தார்.
குளிர்பானத்தில் விஷத்தை கலந்த முருகன் அதைக் குடித்துவிட்டு, பின்னர் மனைவி மாலதி மற்றும் குழந்தைகள்சக்தி, கார்த்தி, கவுசல்யா ஆகியோருக்கும் கொடுத்தார். பானத்தில் விஷம் இருப்பது தெரிந்தும் மாலதி அதைக்குடித்தார். குழந்தைகள் தெரியாமல் குடித்தனர்.
இந் நிலையில் பள்ளியில் இருந்து மூத்த மகள் காயத்ரி வீடு திரும்பினார். அவருக்கும் விஷம் கலந்தகுளிர்பானத்தை முருகன் கொடுத்தார். ஆனால், அவர் குடிக்க மறுத்துவிட்டார். வீட்டில் அனைவரும் விஷம்குடித்துவிட்டு அரை மயக்கத்தில் இருப்பதைக் கண்ட காயத்ரி அலறியபடி தாத்தா முருகேசன் வீட்டுக்கு ஓடினார்.அனைவரும் விஷம் குடித்த விபரத்தைச் சொன்னார்.
இதையடுத்து முருகேசன் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, முருகன், மாலதி, சக்தி, கார்த்தி,கவுசல்யா ஆகிய 5 பேரும் வாயில் நுரை தள்ளி மயங்கிக் கிடந்தனர். அவர்களை கும்பகோணம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே 5 பேரும் உயிரிழந்துவிட்டனர். இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.
-->