லண்டன் டூ சென்னை .. காலியாக வந்த இங்கிலாந்து விமானம்!
சென்னை:
விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, லண்டன் நகலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ்ஏர்வேஸ் விமானம் பயணிகள் யாருமின்றி காலியாக வந்தது.
லண்டன், ஹீத்ரு விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கிளம்ப அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும்,பயணிகளையும் ஏற அனுமதிக்கவில்லை. இந் நிலையில், சென்னை செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம், பயணிகள் இல்லாத காரணத்தால் முதலில் ரத்து செய்யப்படவிருந்தது.
ஆனால், மறு மார்க்கத்தில் சென்னையில் பயணிகள் காத்திருப்பார்கள் என்பதால், பயணிகளின்றி சென்னைக்குவிமானத்தை அனுப்ப நிறுவனம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து விமானிகள், ஏர் ஹோஸ்டஸ் பெண்கள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 14 பேர் மட்டுமேவிமானத்தில் பயணிக்க விமானம் சென்னை வந்து சேர்ந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தவிமானம், 303 பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் காலை 8.15 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications