"குடிமகன்"களுக்கும் ஆடித் தள்ளுபடி!
மதுரை:
ஜவுளிகளுக்கும் பிற பொருட்களுக்கும்தான் ஆடித் தள்ளுபடி தரலாமா. நாங்கள் குடிமகன்களுக்கும் ஆடித்தள்ளுபடி தருகிறோம் என்று மதுரையில் சில மதுக் கடைகளில் ஆடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு கோலாகலவிற்பனை நடந்து வருகிறது.
ஆடி மாதம் பிறந்தாலே, ஜவுளிக் கடைகளில் 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை அமோகமாகநடக்கும்.
எங்கு பார்த்தாலும் தள்ளுபடி வியாபாரம் படு பிசியாக நடக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வித்தியாசமானஆடித் தள்ளுபடி விற்பனை "அலப்பறையாக" நடந்து வருகிறது.
ஜவுளிகளுக்கு கொடுக்கப்படும் தள்ளுபடி போல மதுக் கடைகளிலும் தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது.
பெரியார் பஸ் நிலையப் பகுதிகளில் உள்ள சன் ஒயின்ஸ் கடையில் முதலில் ஆடித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மது வகைக்கும் குறைந்தது 4 முதல் 6 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குடிமகன்களும் இந்த ஆடியில் கொஞ்சம் சந்தோஷமாக "ஆடி" விட்டுப் போகட்டுமே என்ற "நல்லெண்ணத்தில்"இந்த தள்ளுபடியை அறிமுகம் செய்ததாக ஒயின்ஷாப்காரர்கள் கூறுகிறார்கள்.
இவர்களைப் பின்பற்றி தற்போது அப்பகுதியில் உள்ள மேலும் சில கடைகளிலும் ஆடித் தள்ளுபடி விற்பனைநடந்து வருகிறது.
மதுரையில் ஆரம்பித்துள்ள இந்த அமர்க்கள தள்ளுபடி மோகம் மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக பரவிவருகிறதாம்.












Click it and Unblock the Notifications