அகதிகளை அழைத்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கையில் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை அகதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமன்னாருக்கு அழைத்துச் சென்ற 4 ராமேஸ்வரம்மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.
முனியசாமி, ஆறுமுகம், ராஜு, பாலுச்சாமி ஆகிய நான்கு மீனவர்களும் ராமேஸ்வரத்தில் உள்ள அச்சுனை என்றஇடத்திலிருந்து தலைமன்னாருக்கு 9 இலங்கை அகதிகளை படகுகளில் திருட்டுத்தனமாக அழைத்துச் சென்றனர்.
தலைமன்னாருக்குக் கொண்டு செல்வதற்காக அகதிகளிடம் ஏராளமான பணம், பொருட்கள் ஆகியவற்றைப்பெற்றுக் கொண்டனர்.
இலங்கை கடற்பகுதிக்குள் அவர்கள் நுழைந்தபோது, ரோந்து வந்த கடற்படையினர் அவர்களை வளைத்துப்பிடித்தனர்.
அவர்கள் அனைவரையும் கைது செய்த கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அனைவரும்மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications