கருணாநிதிக்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்
சென்னை:
திமுக நிர்வாகிகள் தேர்தல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த நாமதேவன் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில்,சென்னை மாநகராட்சி வார்டு எண் 31 முதல் 40 வரையிலானவற்றிற்கு கடந்த மே 21ம் தேதி கட்சித் தேர்தல்நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
பின்னர் இது 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த நாளில், 31வது வார்டில் (பெரம்பூர்) தேர்தல்நடக்கவில்லை.
மற்ற வார்டுகளுக்குத் தேர்தல் நடந்தது. பெரம்பூர் பகுதி திமுக செயலாளர் பதவிக்கு நான் போட்டியிட்டேன்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றும் கட்சிப் பத்திரிக்கையானமுரசொலியில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால், அதே முரசொலியில், அடுத்த நாள் 31-வது வார்டுக்குரிய திமுக நிர்வாகிகள் போட்டியின்றிதேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
வெங்கடேசன் என்பவர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின்பேரில்தான் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகளில் தலைவர்கள் தலையிடுவதை கோர்ட் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், வெங்கடேசன்தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த 13-வது உதவி நீதிபதி, திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், தேர்தல்அதிகாரி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.
வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.