For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி அமாவாசை: கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் புனித நீராடிய பக்தர்கள்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி, திருவையாறுஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மறைந்த முன்னோர்களுக்கு நேர்த்திக் கடன் செய்வது இந்த நாளில்தான். அப்படிச் செய்தால் பிள்ளைகளுக்கும்,சந்ததிகளுக்கும் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம், முக்கடல் சங்கமிக்கு கன்னியாகுமரி, திருவையாறு,திருச்சி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

ராமேஸ்வரம் கடலில் ஆயிரக்கணக்கானவர்கள் நீராடினர். அதேபோல, கன்னியாகுமரி கடலிலும்ஆயிரக்கணக்கானோர் நீராடினர்.

இதேபோல, திருவையாறு காவிரி ஆற்றிலும் புனித நீராடினர். மேலும் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாதகாரணத்தால், பம்பு மூலம் தண்ணீர் எடுத்து பைப் மூலம் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X