மன்னியுங்கள் அம்மா!
சென்னை:
தெரியாமல் ஸ்டிரைக் செய்து விட்டோம். எங்களை மன்னியுங்கள் அம்மா, தாயுள்ளத்தோடுஎங்களுக்கு மீண்டும் வேலை தாருங்கள் என்று தமிழக அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர்சூரியமூர்த்தி பகிரங்கமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் பிற போராட்டக் குழுக்களின் கூட்டமைப்பில் இருந்து சூர்யமூர்த்தி தனது சங்கத்தைவிலக்கினார். வழக்கமாகவே ஜெயலலிதாவை ஆதரிக்கும் இவர் அரைகுறை மனதோடு தான்போராட்டத்தில் பங்கேற்றார்.
இப்போது போராட்ட அமைப்புகளுடனான உறவை இவரது அலுவலர் ஒன்றியம் துண்டித்துக்கொண்டுவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் அலுவலர் ஒன்றியதத்தின் செயற்குழுக் கூட்டம்நடந்தது.
கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய சூரியமூர்த்தி,
வேலை நிறுத்தத்தினால் முதல்வருக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்து விட்டோம். அதற்காகஒட்டு மொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் அம்மா அவர்களிடம் பகிரங்கமாகமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தாயுள்ளத்தோடு அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும். இப்போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.
எனவே, ஜாக்டோ ஜியோ -கோட்டா ஜியோ கூட்டமைப்பு என்ற ஆயுதம் தேவைப்படவில்லை.எனவே தான் அந்த ஆயுதத்தைப் போட்டுவிட்டு சமாதான அணுகுமுறைக்குத் திரும்பி விட்டோம்என்றார்.












Click it and Unblock the Notifications