பெண்கள் சண்டையில் கட்டை விரல் "கட்"!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண்ணின் கட்டைவிரலை கடித்துத் துப்பினார் இன்னொரு பெண்.
தாம்பரம் அருகே உள்ள பெரும்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கும், ஆலிஸ்என்ற பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
வழக்கம் போல இது குடுமிபிடி சண்டையாக மாறி, கடித்துக் கொள்ளும் அளவுக்குச் சென்றது.
சண்டையின் உக்கிரத்தில் செல்வியின் கட்டை விரலை ஆலிஸ் கடித்துத் துப்பினார்.
ரத்தம் சொட்ட சொட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்ற செல்வி புகார் கொடுத்தார்.
விரலைக் கடித்துத் துப்பிய ஆலிஸ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications