சேலம் சிறையில் ஜான் பாண்டியனின் உண்ணாவிரதம் வாபஸ்
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஜான்பாண்டியன் உள்ளிட்ட கைதிகள் தங்களதுபோராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் தலைவரான ஜான் பாண்டியன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வழக்கு தொடர்பாக சமீபத்தில் சேலம் சிறையிலிருந்து மதுரைக்கு போலீஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டார்ஜான் பாண்டியன். அப்போது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டதாகத் தெரிகிறது.
மதுரையிலிருந்து சேலம் சிறைக்கு வந்ததும் சக கைதிகளிடம் இன்ஸ்பெக்டர் தன்னை ஜாதிப் பெயரை சொல்லித்திட்டியதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை முதல் ஜான் பாண்டியன்உள்பட 40 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுடன் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைநடத்தினர்.
இதைத் தொடர்ந்து 26 கைதிகள் முதல் கட்டமாக போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். தொடர்ந்து ஜான்பாண்டியனுடன் சிறை அதிகாரிகள் பேச்சு நடத்தியதையடுத்து, நேற்று காலை அனைவரும் போராட்டத்தைவிலக்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications