சீன நாட்டு கொடியை எரித்து மாணவர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அகில பாரத வித்யார்த்தி பரிஷத் எனப்படும் பா.ஜ.கவின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் சீன நாட்டுக்கொடியை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
அருணாச்சல் பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்புசீன நாட்டு ராணுவ வீரர்கள், அருணாச்சல் பிரதேசத்திற்குள் ஊடுறுவியுள்ளனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது.
இந் நிலையில் சீனாவின் போக்கைக் கண்டித்து, சென்னையில் சீன நாட்டு கொடியை எரிக்கும் போராட்டத்தைஅகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு ஈடுபட்டது.
தி.நகரில் நடந்த இந்தப் போராட்டத்தின்போது சீனாவுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. பின்னர்அவர்களை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications