சோனியா--வாசன் கோஷ்டி சந்திப்பு: சோ.பா, இளங்கோவனை மாற்ற கோரிக்கை
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியஇருவரையும் மாற்றி விட்டு ஒரே தலைவரை நியமிக்கக் கோரி ஜி.கே.வாசன் ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 14 பேர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தமிழக பார்வையாளர் கமல் நாத் ஒரு தலைப்பட்டசமாக செயல்படுவதால் அவரையும் நீக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்துவருகிறது.
காங்கிரஸ் கட்சியில தினசரி ஏதாவது ஒரு கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காமராஜர்நூற்றாண்டு விழாவையொட்டி கொஞ்ச நாட்களாக அமைதி நிலவியது.
தற்போது மீண்டும் பூசல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த 14 தமிழகஎம்.எல்.ஏக்கள் டெல்லி விரைந்தனர்.
சோ.பா.வும் வேண்டாம், இளங்கோவனும் வேண்டாம், புதிதாக ஒரு தலைவரை, ஒரே ஒருதலைவரை நியமியுங்கள் என்று சோனியாவைச் சந்தித்து இவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும்கமல்நாத் இளங்கோவனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ, காங்கிரஸ் கோஷ்டிப் பூசலுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு கிடைக்காதுஎன்பதை அவ்வப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினர் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications