For Daily Alerts
Just In
கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 4 பேர் பலி
திருச்சி:
திருச்சி அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், காரில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் வர்கீஸ். இவர் தனது காரில், குடும்பத்துடன்வேளாங்கண்ணி சென்று திரும்பினார்.
திருச்சி அருகே இனாம்குளத்தூர் என்ற இடத்தில் கார் வந்தபோது, எதிரே வேகமாக வந்தகண்டெய்னர் லாரி, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இரண்டரை வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Thursday, April 24, 2003, 5:30 [IST]