For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீன் நிபந்தனை தளர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குவைத் பெண் தலால் ஆஸ்மியின் ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. சம்மன் அனுப்ப்பட்டால் மட்டும்நீதிமன்றத்தில் ஆஜரானால் போதும் என்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த தலால் ஆஸ்மி போலி பாஸ்போர்ட் மூலம் தனது காதலர் காதர் பாட்சாவுடன் சென்னைவந்தபோது மாட்டிக் கொண்டார். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.

இதன்படி 3 மாதத்திற்கு ஒரு முறை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

ஆனால், குழந்தை பிறந்து விட்டதால் 3 மாதத்திற்கு ஒரு முறை வருவது கடினமாக உள்ளதாகவும், நிபந்தனையைத்தளர்த்துமாறும் தலால் ஆஸ்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பரிசீலித்த நீதிபதி ஜெகன்னாதன், தலால் ஆஸ்மிக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபாஎன்பவர் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை தலால் ஆஸ்மி கோர்ட்டுக்கு வரவேண்டாம். கோர்ட் அழைத்தால் மட்டும் வந்தால் போதும் என்று கூறி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X