தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரமாகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதிலும் நியமிக்கப்பட்ட 15,000 தற்காலிக ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்க அரசு யோசித்துவருவதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்ததால்,லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து தற்காலிகஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதிலும் 15,000 பேர் தற்காலிக ஊழியர்களாக தேர்வுசெய்யப்பட்டனர்.

தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் 1.60 லட்சம் பேரில், 6032 ஊழியர்களைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்ந்து விட்டனர். 6032 பேருடைய வழக்குகள் குறித்து 3 நீதிபதிகள் கொண்ட குழு விரைவில் விசாரிக்கஉள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகுதான் இவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவரும்.

இந்த நிலையில் தற்காலிகாமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 ஊழியர்களின் கதி குறித்து தெளிவாகத்தெரியவில்லை. அவர்கள் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது.

அவர்களது பணியை நிரந்தரமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரத்தில் பேசப்படுகிறது.அரசுப் பணிகளில் 1 லட்சம் காலியிடங்கள் உள்ளன.

எனவே 15,000 ஊழியர்களையும் அப்படியே வைத்துக் கொள்வதில் அரசுக்கு எந்தவித கூடுதல் சுமையும் வரப்போவதில்லை. எனவே இவர்களது பணியை நிரந்தரமாக்குவது தொடர்பாக விரைவில் அரசு அறிவிப்புவெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+