நீலகிரியில் வீரப்பன்? தேடுதல் வேட்டை தீவிரம்
குன்னூர்:
நீலகிரி மலைப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
மாயாவி வீரப்பனுக்கு சமீப காலமாக ஆஸ்துமா தொல்லை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காட்டுக்குள் மழைபெய்து வருவதால் அடிக்கடி இடத்தை மாற்றி வருகிறான். மேலும் டாக்டர் யாராவது கிடைக்க மாட்டார்களாஎன்றும் அவன் அலை பாய்ந்து வருகிறான்.
டாக்டரிடம் சிகிச்சை பெறுவதற்காக யாரையாவது கடத்த வீரப்பன் திட்டமிட்டுள்ளதாக முன்பு கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்தியூர், பந்திப்பூர் காட்டுப் பகுதியில் யாரும் நடமாடக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுமலை மற்றும் பந்திப்பூர் சுற்றுலா ஸ்தலங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த நிலையில், முதுமலை காட்டுப் பகுதியில் வீரப்பன் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. வைரகுப்பா என்றஇடத்தில் வீரப்பனைப் பார்த்ததாக சிலர் தகவல் தெரிவிக்கவே அதிரடிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றுதேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதேபோல, முதுமலை, மங்களாப்பட்டி, மாயார் ஆகிய பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.கோத்தகிரி, குன்னூர் பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.