சப் -இன்ஸ்பெக்டர் தேர்வு: 103 பெண்களிடம் லஞ்சம் வாங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் கலந்து கொண்ட 103 பேரிடம் தலா ரூ. 300 லஞ்சம் வாங்கிய இரண்டுசப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு சென்னையில் தேர்வு நடந்தது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 103 பெண்களுக்கும் பங்கேற்றனர். அவர்களைச் சந்தித்தசப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் இன்னொரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர், சாதகமான மருத்துவச்சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூ. 300 லஞ்சம் வாங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண் விசாரணை நடத்தி இந்த இருசப்-இன்ஸ்பெக்டர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications