டெஸ்மாவுக்கு எதிரான வழக்கு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெஸ்மா அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்பெறப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க தலைவர் தண்டபாணி, டெஸ்மா சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்குத் தகுந்ததா என்பது குறித்து இன்று அறிவிப்பதாகநீதிபதி கோவிந்தராஜன் நேற்று அறிவித்திருந்தார்.
இந் நிலையில் இன்று மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சுப்ரமணியம், ரிட் மனுவை வாபஸ் பெறுவதாகதெரிவித்தார். இதைத் தொடர்ந்து மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதியளித்தார்.
மனு வாபஸ் பெறப்பட்டது குறித்து தண்டபாணி கூறுகையில், அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையேநல்லுறவைப் பேணிப் பாதுகாக்கும் ஒரே காரணத்திற்காகவே மனுவை வாபஸ் பெற்றதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications