வீட்டு வேலைக்கு அனுப்பிய சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில், வீட்டு வேலைக்காக அனுப்பப்பட்ட சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணைப் போலீஸார்கைது செய்தனர்.
தஞ்சாவூர் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சிறுமி சாய்ரா பானு. இவர் 8-வது வகுப்பு படித்து வந்தார். வறுமையில்வாடியது இவரது குடும்பம். இதனால், தங்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த விஜிஎன்பவரின் வீட்டுக்கு வேலைக்கு அனுப்பினார் சாய்ராவின் தாயார்.
வீட்டு வேலைக்கு சேர்க்கப்பட்ட சாய்ரா பானுவை நன்றாக கவனித்துக் கொண்ட விஜி, அவரிடம் நைச்சியமாகபேசி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். சமீபத்தில் சேலம் பஸ் நிலையத்தில் ஆண்களை விபச்சாரத்துக்குஅழைத்துக் கொண்டிருந்தபோது போலீஸாரிடம் விஜி பிடிபட்டார்.
அவருடன் நின்றிருந்த சிறுமி சாய்ரா பானுவும் பிடிபட்டார். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த உண்மை தெரியவந்தது.
இதையடுத்து விஜியை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். சாய்ரா பானு, சிறார் பாதுகாப்புஇல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை என வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றும் சாய்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகபோலீசாரிடம் விஜி ஒப்புக் கொண்டுள்ளார்.