அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரமும் ரத்து!
சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த அடியைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
59 அங்கீகாரம் பெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அவற்றின் கிளைச் சங்கங்கள் என 300க்கும்மேற்பட்ட சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கலைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
கலைக்கப்பட்ட சங்கங்கள் அனைத்தும் ஜாக்டோ ஜியோ, கோட்டா ஜியோ கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டுவருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் சமீபத்தில்தான் ஒரு வழியாக முடிவுக்குவந்தது. இன்னும் கூட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலையில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.
கலைக்கப்பட்ட சங்கங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முக்கியமானதாகும். இந்த சங்கம் கடந்த 83ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான சங்கமாகும்.
தங்களது சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சங்கத் தலைவர் சூரியமூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசின் நடவடிக்கை மிகுந்த வேதனையைத் தருகிறது. வெள்ளையர் ஆட்சியில், அதாவது 83 ஆண்டுகளுக்குமுன்பே எங்களது சங்கம் உருவானது. வெள்ளையர்களால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட எங்களது சங்கம் இதுவரைபல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கூட இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. எல்லாம் சுமூகமாகி வரும்நேரத்தில் இவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது என்றார்.
இவர் தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட காரணத்தால் சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசுசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக் தொடர்பாக நடந்த சங்கங்களின் கூட்டங்களில் பேசிய பல நிர்வாகிகளும் அறுவெறுக்கத்தக்கவார்த்தைகளாலும், அசிங்கமான வார்த்தைகளாலும் அரசை விமர்சித்ததாக உளவுப் பிரிவு தகவல் தந்தது.இதையடுத்தே சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.
இந்த ரத்து உத்தரவில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள்,சங்கங்களின் நிர்வாகிகளிடம் நேரடியாகவே கொடுக்கப்பட்டுள்ளது.
அரசின் முடிவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தலைமைச் செயலக ஊழியர்கள் தான். ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால்அவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். தற்போது தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின்அங்கீகாரமும் ரத்தாகியுள்ளது.
இதை முதல்வர் ஜெயலலதிதா மறுபசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத் தலைவர் பாண்டுரங்கன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் முடிந்து, நிலைமை சுமூகமாகிக் கொண்டுள்ள நிலையில் சங்கங்களின்அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது ஜெயலலிதாவின் சர்வாதிகார, அராஜக போக்கையே காட்டுகிறது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications