கருணாநிதியின் தேர்தல் நிதி வசூல் பயணம் தொடங்கியது
சென்னை:
திமுக தேர்தல் நிதி வசூல் பொதுக் கூட்ட சுற்றுப் பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று முதல்தொடங்குகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதையொட்டி இப்போதேதேர்தல் நிதி வசூலிக்கத் தொடங்கி விட்டனர் திமுகவினர்.
ஒவ்வொரு மாவட்டம் இவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்குஉத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் நிதி வசூலை ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காகநேற்று அவர் தஞ்சாவூர் புறப்பட்டார். இன்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்ற்ேகிறார். கூட்டத்தில்அவரிடம் தஞ்சாவூர் மாவட்ட திமுக சார்பில் நிதி வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் நிதியைப் பெறவுள்ளார். இதையடுத்து அனைத்துமாவட்டங்களிலும் திமுகவினர் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications