ஊழியர்கள் மீதான வழக்கு: நீதிபதிகள் குழுவுக்கு அலுவலகம் ஒதுக்கீடு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று எஸ்மா சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6,072 அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகளை விசாரிக்கவுள்ள 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவுக்குஅலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திலிருந்து விசாரணை தொடங்கலாம் என்று தெரிகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான சம்பத்,தங்கவேலு, மலை சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நீதிபதிக்கும் நான்கு ஊழியர்கள் (நீதிமன்ற அதிகாரி, தனி உதவியாளர், கார் டிரைவர், அலுவலகஉதவியாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு காரும் தரப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலிருந்து விசாரணை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தவிர மதுரை, கோவைக்கும் இந்த நீதிபதிகள் குழு சென்று விசாரணை நடத்தவுள்ளது. ஒவ்வொருநீதிபதியும் தலா 2,234 ஊழியர்களிடம் விசாரணை நடத்துவார்கள். ஒரு மாதத்தில் விசாரணையை இவர்கள் நடத்திமுடித்து அறிக்கை தர வேண்டும்.
இதற்கு இவர்களுக்கு ஊதியமாக ரூ. 50.000 தரப்படும்.
அலுவலகத்தை மாற்ற நீதிபதிகள் கோரிக்கை:
இதற்கிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கு விசாரணை தொடர்பாக, 3 நீதிபதிகளும் இன்று தங்களுக்குஒதுக்கப்பட்ட அலுவலகத்துக்கு வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநில அரசின் நிர்வாக சீர்திருத்துத் துறைச் செயலாளர் மெய்கண்டதேவனுடன் நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அடையாறு ஆற்றோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் குடியிருப்புகளில் 3 பங்களாக்களை விசாரணைநீதிமன்றங்களாக மாற்றித் தருமாறு நீதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இப்போது ஒதுக்கப்பட்டுள்ள கிரீன்வேஸ் சாலை இல்லத்தில், இட வசதி போதாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications