For Daily Alerts
Just In
மேட்டூர் அணை நீர்மட்டம் 44 அடியாக உயர்வு
சேலம்:
மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் தற்போது 44.05 அடி நீர் இருப்புஉள்ளது.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளதையடுத்து மேட்டூர் அணைக்குநீர் வரத்து அதிகரித்துள்ளது.
இப்போதையே நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5,706 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் 44.05அடி நீர் உள்ளது.
தொடர் மழை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளதால்,அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப் பணித்துறையினர் கூறியுள்ளனர்.
Story first published: Saturday, May 10, 2003, 5:30 [IST]