For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மயிலாப்பூர்- திருவான்மியூர் இடையே மாடி ரயில் வெள்ளோட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மயிலாப்பூர் முதல் திருவான்மியூர் வரை அமைக்கப்பட்டுள்ள மாடி ரயில் பாலத்தில் ரயில்வெள்ளோட்டம் விடப்பட்டது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் இந்தவெள்ளோட்டம் நடந்தது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரையிலும்மாடி ரயில் விடப்படவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது திருவான்மியூர்(டைடல் பூங்கா) வரையிலான பணிகள் முடிந்து விட்டன.

இதையடுத்து நேற்று மயிலாப்பூர் நிலையத்திலிருந்து திருவான்மியூர் வரை மாடி ரயில் வெள்ளோட்டம் நடந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் மூர்த்தி கூறுகையில்,

மயிலையிலிருந்து திருவான்மியூர் வரை அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மாடி ரயில் ஓடத் தொடங்கும். வேளச்சேரிவரையிலான பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுறும். அதன் பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி முதல்இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கும்.

தரமணியிலிருந்து மாமல்லபுரம் வரையிலான மாடி ரயில் போக்குவரத்து தொடர்பான சர்வே பணிகள் முடிந்துதிட்டம் தற்போது ஆய்வில் உள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X