கல்வி கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
சென்னை :
கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தமாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னைசைதாப்பேட்டை சின்னமலைப் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
பின்னர் மாணவர்கள் ஊர்வலமாக சென்று ஆளுனர் மாளிகை முன் கோஷமிட்டனர். அதன் பின்னர்மாணவர்களின் பிரதிநிதிகள், ஆளுனரின் தனிச் செயலாளரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
இதேபோன்ற போராட்டம் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நடந்தது.