குஜராத்தில் பாலம் உடைந்து ஸ்கூல் வேன், வாகனங்கள் ஆற்றில் விழுந்தன: 20 குழந்தைகள் பலி?
சூரத்:
தெற்கு குஜராத்தில் உள்ள தாமன் யூனியன் பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் உடைந்தது. அப்போது பாலத்தில் சென்றஸ்கூல் வேன் ஆற்றில் விழுந்ததில் 20 பள்ளிக் குழந்தைகள் இறந்திரக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 2மாணவிகள் உள்பட 8 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
டையூ, தாமன் யூனியன் பிரதேசத்தில் உள்ள தாமன்கங்கா ஆற்றின மீது மோத்தி தாமன் மற்றும் நானி தாமன்ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம் இது.
இந்தப் பாலம் சமீபத்தில் தான் சீர் செய்யப்பட்டது. இன்று பகலில் கடும் மழை பெய்து கொண்டிருந்தபோது, இந்தப்பாலத்தின் மீது பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது அது உடைந்தது. அப்போது அதில் சென்றுகொண்டிருந்த வேன், ஒரு ஆட்டோ உள்ளிட்ட பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. நடந்து சென்றவர்களும்ஆற்றில் விழுந்தனர்.
எத்தனை வாகனங்கள் உள்ளே விழுந்தன, எத்தனை பேர் விழுந்தனர் என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.சம்பவ இடத்துக்கு மீட்புப் படைகள் விரைந்துள்ளன.
இதுவரை 4 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் 8 குழந்தைகளின் உடல்கள்மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்குள் விழுந்த சுமார் 27 பேர் வரை படுகாயத்துடன்மீட்கப்பட்டுள்ளனர். ஸ்கூல் வேனில் மட்டும் மேலும் 20 குழந்தைகள் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.அவர்களது நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் பலியாகி இருக்கக் கூடும் என்றுஅஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications