For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 ஆண்டுகளில் 24 அமைச்சர்களின் பதவி பறிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இதுவரை 24 பேருடைய பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வந்த அன்வர் ராஜா திடீரென்று இன்று டிஸ்மிஸ்செய்யப்பட்டார். அவருக்குப் பதில், வா.து.நடராஜன் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.நாளை அவர் பதவியேற்க உள்ளார். நடராஜனும் ஏற்கனவே அமைச்சராக இருந்து பின்னர் டிஸ்மிஸ்செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மொத்தம் 24 அமைச்சர்கள் பதவியிழந்துள்ளனர்.இவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் மீண்டும் பதவி கிடைத்தது. அமைச்சரவையில் மாற்றம்செய்யப்படுவது இது 12-வது முறையாகும்.

அன்வர் ராஜா நீக்கத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. கடந்த முறை அவர்நீக்கப்பட்டபோது, அவர் மீது ஊழல் புகார் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த முறை என்னகாரணத்திற்காக அவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

மீண்டும் அமைச்சராகியுள்ள வா.து.நடராஜன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி டிஸ்மிஸ்செய்யப்பட்டார். அப்போது அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இளையாங்குடி சட்டசபைத் தொகுதியில், முன்னாள் அமைச்சர்எஸ்.கண்ணப்பனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் நடராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X