போலீஸ் வேனில் மயங்கி விழுந்த வைகோ
சிதம்பரம்:
நாகப்பட்டனம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சோர்வுகாரணமாக மயங்கி விழுந்தார். இதையடுத்து சிதம்பரம் காவல் நிலையத்தில் சிறிது நேரம்ஓய்வெடுத்த பின்னர் அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
மயிலாடுதுறையில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த திமுக-அதிமுக மோதல் தொடர்பாக வைகோ மீதுவழக்குத் தொடரப்பட்ட, நாகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நாகைநீதிமன்றத்தில் வைகோ ஆஜர் செய்யப்பட்டார்.
இதற்காக அவர் வேலூர் சிறையிலிருந்து வேன் மூலம் நாகை கொண்டு வரப்பட்டார். காலை 11மணியளவில் வேன் சிதம்பரத்தை நெருங்கியபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வேன் நேராக காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வேனிலிருந்துஇறங்கிய வைகோ, தள்ளாடியபடியே நடந்து காவல் நிலையத்திற்குள் சென்று அமர்ந்தார்.
பின்னர் அங்குள்ள இன்ஸ்பெக்டர் அறையில் இருந்த மேசை மீது தலை வைத்து அப்படியே படுத்துவிட்டார். சுமார் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு அவர் மீண்டும் வேனில் ஏறினார். அதன் பிறகுநீதிமன்றம் நோக்கி வேன் பயணித்தது.
வைகோ மயக்கமடைந்து விட்ட செய்தி அறிந்ததும் காவல் நிலையம் முன்பு ஏராளமானபொதுமக்களும், திரளான மதிமுகவினரும், திமுகவினரும் திரண்டு விட்டனர். வைகோவிற்குஒன்றும் ஆகவில்லை என்று போலீஸார் சொல்லிய பிறகே அவர்கள் நிம்மதியடைந்தனர்.
முதல் நாள் சென்னைக்கும், நேற்று நாகைக்கும் தொடர்ந்து வேனில் பயணம் செய்ததால் ஏற்பட்டசோர்வு காரணமாகவே அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.