தா.கி.வழக்கு: முபாரக் மீண்டும் ஜாமீன் கோரி மனு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகியுள்ள வில்லாபுரம் முபாரக்மந்திரி மீண்டும் ஜாமீன் கோரி மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இவர்களில் முபாரக்மந்திரியும் ஒருவர்.
வில்லாபுரத்தைச் சேர்ந்த முபாரக் மந்திரி, ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை6-வது குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த நிலையில் தற்போது 2-வது முறாைக மதுரைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முபாரக் மந்திரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் 9ம் தேதி இந்த மனு நீதிபதி சிவப்பிரகாசம் முன்பு விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications