For Quick Alerts
For Daily Alerts
Just In
கோவை, ஈரோட்டுக்கு அமராவதி ஆற்று நீர் திறப்பு
சென்னை:
கோவை, ஈரோடு, கரூர் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு, 3 மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதை ஏற்று முதல்வர் ஜெயலலிதா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதன்படி, பத்து நாட்களுக்கு ராமகுளம், கல்லபுரம் கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும்.
முதல் 2 நாட்களுக்கு 23 பழைய கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1,500 கன அடி நீரும், அடுத்தஎட்டு நாட்களுக்கு 1,000 கன அடி நீரும் திறந்து விடப்படும்.
Comments
Story first published: Saturday, September 13, 2003, 5:30 [IST]