For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் பஞ்சாயத்து அவலங்கள்: கீரிப்பட்டியில் போட்டியிட்ட 2 பேரும் வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஇரண்டு தலித் வேட்பாளர்களும் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், இந்த முறையும் அங்கு தேர்தல்நடைபெறும் வாய்ப்பு போய் விட்டது.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் ஆகியநான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் அக்போடர் 9ம தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் பல காலமாக தேர்தலே நடைபெறவில்லை. அப்படியே நடந்தாலும்,தேர்தல் முடிந்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தேவர் சமூகத்தினரால் மிரட்டப்பட்டு பதவி விலகி விடுவதுவழக்கம்.

இந் நிலையில் பாப்பாபட்டி 3 பேரும், கீரிப்பட்டியில் 2 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால்,நாட்டாரம மங்கலம், கொட்டாச்சியேந்தல் பஞ்சாயத்துகளில் யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

இந் நிலையில் கீரிப்பட்டியில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த 2 பேரும் இன்று போட்டியில் இருந்து வாபஸ்பெற்றுவிட்டனர். இதையடுத்து கீரிப்பட்டியில் இந்த முறையும் தேர்தல் நடைபெறும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

பாப்பாபட்டியில் மனுத்தாக்கல் செய்துள்ள 3 பேரும் போட்டியில் உள்ளனர். எனவே இங்கு மட்டுமே தேர்தல்நடக்கவுள்ளது.

தலித்களை போட்டியிடக் கூட விடாமல் தடுக்கும் இந்த 4 பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர், மின் இணைப்பு, பஸ்வசதிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X