For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள மீனவர்கள் அட்டகாசம்: போராடம் நடத்த குமரி மாவட்ட மீனவர்கள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

அரபிக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் தொடர்ந்து தாக்கி வருவதைக்கண்டித்து தமிழக- கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சாலை மறியல் போராட்டம் நடத்தகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்ட மீனவர்கள், கேரள கடல்பகுதியில் பல நூற்றாண்டு காலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் தாக்குவதும், படகுகளுக்கு தீ வைப்பதும்அதிகரித்து வருகிறது.

கொல்லம் பகுதியில் ஆரம்பித்த இந்த மோதல் தற்போது கொச்சி வரை சென்றுள்ளது. சமீபத்தில் கொச்சிதுறைமுகத்தில் இருந்து பல கி.மீ. தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 9பேர் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்தது.

இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். தமிழக மீனவர்களின் படகும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், கேரளமீனவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், களியக்காவிளை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த களியக்காவிளை பகுதி வழியாகத் தான் தென் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு எனசகலமும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X