அரசு ஊழியர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க பரிந்துரை
சென்னை:
அரசின் செலவுகளைக் குறைப்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.எம்.சுவாமிநாதன் கமிஷன், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்குக் குறைக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் கமிஷனிடம் அரசின் ஒட்டுமொத்த செலவைக் குறைப்பது, அரசுத் துறைகளை மேம்படுத்துவது, அரசுப் பணிகளில் வேகத்தைக் கொண்டு வருவது, அரசு-மக்கள் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டிருந்தது.
சுவாமிநாதன் கமிஷனின் இறுதிக் கட்ட அறிக்கை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அரசு ஊழியர்களின் விடுப்பு நாட்களைக் குறைக்கவும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தாற்காலிகப் பதவிகளை கூண்டோடு ஒழிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் டிரைவர், டெலிபோன் ஆபரேட்டர், வாட்ச்மேன், துப்புறவுத் தொழிலாளர்கள் ஆகிய வேலைகளுக்கு அரசு ஆள் எடுக்காமல், இந்தப் பணிகளை தனியாார் வசம் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைத்துவிடலாம் என்றும் இந்தக் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications