Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மியூசிக் அகாடமி செயற்குழுவில் அமளி: போலீஸ் வரவழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மிக பிரதித்தி பெற்ற செனனை மியூசிக் அகாடமியின் செயற்குழுக் கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

சென்னையில் பிரபலமானது மியூசிக் அகாடமி. இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பெயர் பெற்றஅமைப்பு. இந்த அமைப்பின் செயற் குழுவைக் கூட்டுவது தொடர்பாக சிக்கல் ஏற்படவே, உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று செயற்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமியிலேயே இக் கூட்டம் நடந்தது.

வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள இசை விழா குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.இக் கூட்டத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை மத்திய மண்டலப் பதிவாளர் குணசேகரன் கலந்துகொண்டார். அகாடமி தலைவர் டி.டி.வாசு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

டிசம்பர் இசை விழா குறித்த விவாதத்தின்போது, சங்கீத கலாநிதி விருது யாருக்கு வழங்குவது என்பது குறித்துபேச்சு எழுந்தது. அப்போது கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகளை (அந்தக் கூட்டம் பதிவாளரின் கண்காணிப்பில் நடைபெறவில்லை) செயற்குழு அங்கீகரிக்க வேண்டும்என்று டி.டி.வாசு தெவித்துள்ளார்.

அதை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக பதிவாளர் குணசேகரனிடம் அவர்கள்முறையிட்டனர்.

அப்போது தேர்ந்தெடுக்கப்படாத 2 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு வாசு ஆட்சேபனைதெவித்தார். இதையடுத்து அங்கு ஆளாளுக்கு எழுந்து பேச ஆரம்பித்தனர். வாக்குவாதம் ஏற்பட்டது

ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சூழ்நலையும் ஏற்பட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ் என சகலமொழிகளிலும் தடித்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஒருவரையொருவர் வாடா, போடா எனஒருமையில் அழைத்துத் திட்டிக் கொண்டனர்.

சிலர் அடிக்கவும் பாயந்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அகாடமி நிர்வாகிகள் உடனே போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் பழனிச்சாமி தலைமையில்போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் வந்த பின்னரே கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்தது. கர்நாடக சங்கீதத்தையேதூக்கி வைத்து ஆடும் இந்த அகாடெமியில் தமிழ் இசைக்கு முன்பு மரியாதையே தரப்பட்டதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+