விமானத்தில் தீ: சென்னையில் அவசரமாய் தரையிறங்கிய துபாய்--சிங்கப்பூர் விமானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் தீ விபத்துஏற்பட்டதையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

398 பயணிகளுடன் அந்த ஏர் பஸ் விமானம் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்தது.தமிழகத்தின் மீது பறந்தபோது அந்த விமானத்தின் சரக்குகள் வைக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.விமானிகளின் காக்பிட்டில் தீ அபாய எச்சரிக்கை விளக்குகள் எரிந்தன.

இதையடுத்து விமான ஊழியர்கள் சரக்குப் பகுதியில் சோதனையிட்டபோது அங்கு தீப்பொறிகள் வெடித்துப்பரவியதைக் கண்டு பைலட்களுக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து விமானத்தை சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவசரமாகத் தரையிறக்க விமானிகள் அனுமதி கோரினர்.

உடனடியாக அனுமதி தரப்பட்டதோடு, எமெர்ஜென்சி லேண்டிங்குக்கு விமான நிலையம் தயாரானது. பின்னர்அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 380 பயணிகளும் 18 ஊழியர்கள் பத்திரமாகத்தரையிறக்கப்பட்டனர்.

தீயணைப்புப் படையினர் விமானத்துக்குள் சென்று பார்த்தபோது 3 பைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. அந்தத்தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இச் சம்பவம் குறித்து அந்த விமானத்தின் பைலட்களிடம்நிருபர்கள் கருத்து கேட்க முயன்றபோது, எதுவும் பேச அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் விமானம் மீண்டும்சிங்கப்பூர் கிளம்பிச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+