அடுத்த வாரம் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் அடுத்த வாரம் மீண்டும் கூட்டப்படவுள்ளது.

காவிரி ஆணையத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை பெற்றுத்தர வேண்டுமெனபிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி வருகிறார்.

வறட்சி காலங்களில் நீரை பகிர்ந்து கொள்ள கடந்த மாதம் 1-ந் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழுகூட்டத்தில் மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றை முன் வைத்தது. ஆனால் அதை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் காவிரி கண்காணிப்பு குழு அடுத்த வாரம் மீண்டும் கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

காவிரி கண்காணிப்பு குழு ஏற்கனவே 2,3 முறை நடந்த போதிலும் எந்த தீர்வும் ஏற்படவில்லலை. எனவே காவிரிஆணையம் கூடும் முன் மீண்டும் காவிரி கண்காணிப்பு குழு கூட்டப்படும்

ஆயுத பூஜை முடிந்ததும் காவிரி கண்காணிப்பு குழு கூடும். இதன் பின் பிரதமர் தலைமையிலான காவிரிஆணையம் கூடும். இம்மாதம் பிரதமர் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செல்கிறார். அநேகமாகபிரதமரின் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு காவிரி ஆணையம் கூட்டப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+