டிஸ்மிஸ்: அக். 13 முதல் பத்தொன்பது மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை
சென்னை:
அக்டோபர் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை பத்தொன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 1,151 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி முடிக்க 3 நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவிசாரணை நடத்தி வருகிறது. தலைமைச் செயலக ஊழியர்கள் 2,789 பேரிடம் முதலில் விசாரணை நடந்தது.பின்னர் சென்னை மாவட்ட அரசு ஊழியர்களிடம் விசாரணை நடந்தது.தற்போது கோவை மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது. அடுத்து தஞ்சாவூர் ஊழியர்கள் விசாரணைக்குஅழைக்கப்பட்டுள்ளனர். அது முடிந்தவுடன் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 19 மாவட்டங்களைச் சேர்ந்த 1,151ஊழியர்களை விசாரிக்க நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.13ம் தேதி காஞ்சிபுரம், கன்னியாகுமரியைச் சேர்ந்த 116 பேரிடம் விசாரணை நடக்கும். 14ம் தேதி மதுரை, கரூர்,நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 150 ஊழியர்களிடமும், 15ம் தேதி நாகப்பட்டனம், நாமக்கல் மாவட்டஊழியர்களிடமும், 16ம் தேதி மீண்டும் நாமக்கல் ஊழியர்களிடமும், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டஊழியர்களிடமும் விசாரணை நடக்கும்.17ம் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் விசாரிக்கப்படுவர். 20ம் தேதிசேலம், சிவகங்கை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேரிடமும்,. 21ம் தேதி நீலகிரி, தேனி, தூத்துக்குடி,திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.22ம் தேதி திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 120 பேடரிம் விசாரணைநடக்கும்.
மீதமுள்ள ஊழியர்கள் எப்போது விசாரிக்கப்படுவர் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று 3 நீதிபதிகள்கொண்ட குழுவின் நீதிமன்ற அதிகாரி ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.