எஸ்.சி.வி. நிறுவனத்தில் ரெய்டு: மதுரை- திண்டுக்கல்லில் கேபிள் ஒளிபரப்பு நிறுத்தம்
மதுரை:
சன் டிவிக்குச் சொந்தமான எஸ்.சி.வி. கேபிள் (சுமங்கலி கேபிள் விஷன்) நிறுவனத்தின் மதுரை கிளையில்போலீசார் சோதனை நடத்தினர். உரிமம் இல்லாமல் புதிய படங்களை ஒளிபரப்பியதாகக் கூறி அந்த நிறுவனத்தின்கருவிகளைக் கைப்பற்றினர். மேலும் பலரை கைதும் செய்துள்ளனர்.
மதுரை தவிர திருச்சியிலும் இதே போன்ற சோதனை நடந்தது. மதுரையில் சுமங்கலி கேபிள் விஷன் தவிர வேறுசில தனியார் கேபிள் டிவி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு கருவிகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து மதுரை முழுவதும் அனைத்துக் கேபிள் டிவி நிறுவனங்களும் தங்களது ஒளிபரப்பை நிறுத்திபோராட்டம் நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லிலும் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் திரைத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, கொடுத்த புகாரின்பேரில் இந்தச் சோதனைகள்நடத்தப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.
சென்னையில் உள்ள திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவில் செல்வமணி புகார் கொடுத்ததாகவும்
இதேபோன்ற புகாரை மதுரையில் உள்ள திருட்டு வீடியோ ஒழிப்புப் பிரிவுக்கும் அவர் அனுப்பியதாகவும்போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து மதுரை பிராந்திய திருட்டு விசிடி ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரஹீம் தலைமையில் போலீஸ் படை மதுரைசுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தி டிவி, கம்ப்யூட்டர், ரூ. 10 லட்சம் மதிப்புள்ளதிருட்டு விசிடிக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 6 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications