நாகப்பட்டிணம் இளைஞருக்கு சிங்கப்பூரில் நாளை மரண தண்டனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 25 வயதான அருண் பிரகாஷ் என்ற இளைஞருக்கு நாளை (வெள்ளிக்கிழமை)சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அருண் பிரகாஷ், கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, தன்னுடன்தங்கியிருந்த லெனின் என்ற தமிழக வாலிபரை குடிபோதையில் ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்தினார்.

இதில் லெனின் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

இதைத் தொடர்ந்து அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவரது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அதை ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரியும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு உலகளாவிய பிரசாரத்தை தொடங்கியது.

சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கும், அருணின் பெற்றோர் கருணை மனு அனுப்பினர். அதில், அருணுக்குமரண தண்டனை கொடுக்க வேண்டாம், திட்டமிட்டு அவர் இந்தக் கொலையை செய்யவில்லை.

அவரது தண்டனையைக் குறைப்பதன் மூலம் அவர் மனம் திருந்தி வாழ வழி கிடைக்கும். லெனினுக்கும்,அருணுக்கும் இடையே முன் விரோதம் ஏதும் இல்லை. உண்மையில், லெனினைக் கத்தியால் குத்திய பிறகு தனதுநண்பர்களோடு சேர்ந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதே அருண்தான் என்று பெற்றோர்கூறியிருந்தனர்.

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளும் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு இதே போன்ற கருணை மனு அனுப்பியிருந்தன.

இருப்பினும், அருணின் கருணை மனுவை எஸ்.ஆர்.நாதன் நிராகத்தார். இதையடுத்து அருணுக்கு அக்டோபர் 3ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அருணின் தந்தை ஒய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது நாகப்பட்டிணம் சுங்கத் துறையில் பணியாற்றிவருகிறார். அவரது தாயார் மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு அருண் தவிர இரு பெண்குழந்தைகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+