காவல் நிலையத்தில் 82 வயது முதியவர் மர்மச் சாவு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் காவல் நிலைய கழிப்பறையில், 82 வயது முதியவர் மர்மமான முறையில்தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. 82 வயதாகும் இவர் தனது மகன்செளந்தரராஜன் வீட்டில் தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்கு மேல் இவரைக் காணவில்லை.
இந்த நிலையில் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் மர்மமான முறையில் தூக்கில்பிணமாக தொங்கிய நிலையில் குமாரசாமி கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். அதற்கு ஏன் அவர் காவல்நிலையத்துக்கு வர வேண்டும் என்று தெரியவில்லை.
அப் பகுதி மக்கள் போலீசார் மீதே சந்தேகம் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications