ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ் மிக்க ஆண்டாள் திருக்கோவில் வளாகத்தில், பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப் படைக் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி ஆயுதப்படையில் காவலராக இருந்து வந்தவர் மாரியப்பன். ஸ்ரீவில்லிபுத்தூல் நடந்து வரும் நவராத்திவிழாவையொட்டி அங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந் நிலையில் நேற்று பணியில் இருந்தபோது திடீரென்று மாரியப்பன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, சம்பவஇடத்திலேயே இறந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications