திமுக மாஜி எம்.எல்.ஏக்கள் வீடுகள், தியேட்டர்கள், ஹோட்டல்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை
சென்னை:
இரு திமுக முன்னாள் எம்.எல்.ஏக்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான தியேட்டர்கள், ஹோட்டல்களில்லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
வழக்கமாக திமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் இந்தச் சோதனைகள் நடந்து வந்தன. இப்போதுஎம்.எல்.ஏக்கள் வீடுகளில் இச் சோதனைகள் நடக்கின்றன.
மாஜி எம்.எல்.ஏக்களான ஆலந்தூர் கே. சண்முகம், திருவள்ளூர் டி.எஸ். மணி ஆகியோரின் வீடுகள், தியேட்டர்,உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் இந்தச் சோதனைகள் நடக்கின்றன.
சண்முகத்தின் வீடு தவிர, அவரது மகன், மகளின் வீட்டிலும், சண்முகத்துக்குச் சொந்தமான இரு திரையரங்குகளிலும்,கடைகளிலும் சோதனைகள் நடக்கின்றன. மொத்தம் 8 இடங்களில் சோதனைகள் நடக்கின்றன.
அதே போல மணியின் வீடு, அவரது மகன்கள், மகள்களின் வீடுகளிலும் இன்று காலை முதல் சோதனைகள்நடக்கின்றன. மணிக்குச் சொந்தமான ஹோட்டல்கள் உள்பட 5 இடங்களில் சோதனைகள் நடக்கின்றன.