கோவையில் கெட்டுப் போன பிறகும் விற்கப்பட்ட கோக், பெப்சி பாட்டில்கள் பறிமுதல்
கோவை:
கோவையில் உபயோகப்படுத்துவதற்கான தேதியைத் தாண்டிய பின்னரும் விற்கப்பட்ட கோக், பெப்சி பாட்டில்கள்பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வினியோகித்த அந்த நிறுவன குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
கோவையில் பழைய ஸ்டாக் கோக், பெப்சி ஆகியவை அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம்உள்ளன,
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் கோக், பெப்சி குளிர்பான விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தமாவட்ட ஆட்சித் தலைவர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
கோவை நகரில் நடந்த சோதனையை அவரும், மேயர் மலரவனும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போதுபல கடைகளில் தேதியைத் தாண்டிய கோக், பெப்சி ஆகியவை விற்கப்பட்டன. அவற்றை பறிமுதல் செய்யஉத்தரவிட்ட கலெக்டர், அவற்றை வினியோகம் செய்த கிட்டங்கிகளுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கிட்டங்களுக்கு சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications