For Daily Alerts
Just In
உயர் கல்வியில் பிரிட்டனுக்கு இந்தியா போட்டியாக வரலாம்: டோனி பிளேர்
லண்டன்:
பிரிட்டன் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அதிக பணம் ஓதுக்க பிரிட்டிஷ் அரசு முடிவுசெய்துள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் தி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவும், சீனாவும் கல்வித்துறையில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. அதை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். எனவேபிரிட்டனில் கல்வியின் மீதான வரியை உயர்த்தப் போவதில்லை.
விரைவில் சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகளில் இந்திய, சீன மாணவர்களுடன் இங்கிலாந்து மாணவர்கள்போட்டியிடும் சூழல் வரலாம். அந்த அளவுக்கு அங்கு உயர் கல்வியின் வளர்ச்சி உள்ளது என்றார்.
அரசின் செலவுகளை சமாளிக்க கல்விக் கட்டணங்களை உயர்த்த வாய்ப்புகள் இருப்பதாக அந் நாட்டுகல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். அதை பிளேர் எதிர்த்துள்ளார்.
Comments
Story first published: Monday, October 13, 2003, 5:30 [IST]