For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் தாறுமாறாக ஓடிய லாரி: ஒருவர் பலி, இருவர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

லாரி ஒன்று தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில்வந்த அரசு ஊழியர் பரிதாபமாக பலியானார்.

சென்னை நகரின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு லாரி வேகமாக வந்தது.

லாரியின் வேகமே சரியில்லை என்று நினைத்த பொதுமக்கள் அதிரும் வகையில், திடீரென்று லாரி தாறுமாறாகஓடத் தொடங்கியது.

இதில் சாலையில் சென்று கொண்டிருந்த 5 இரு சக்கர வாகனங்களை இடித்துத் தள்ளிய லாரி, 3 வண்டிகளைஅப்படியே இழுத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் மோதி நின்றது.

இதில் அரசு ஊழியரான சங்கர் என்பவர் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் லாரிக்கடியில் சிக்கியிருந்தனர்.

தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து லாரிக்கடியில் சிக்கியவர்களைமீட்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி, சங்கரின் உடலை மீட்டனர்.

மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சங்கர் தடய அறிவியல் பிரிவில் பணியாற்றிவந்தவர்.

நகருக்குள் பகல் நேரங்களில் லாரியை ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X