ரேஷன் கடைகளில் சூடு பிடிக்கிறது "காண்டம்" விற்பனை!
சென்னை:
தமிழகம் முழுவதிலும் ரேஷன் கடைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஆணுறைகளின் விற்பனை மிக விறு விறுப்பாகநடந்து வருவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுகழகத் திட்ட இயக்குநர் தீனபந்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தீனபந்து கூறுகையில், செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் 3விதமான ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனைக்கு பொது மக்களிடையே நல்லவரவேற்பு உள்ளது.
இருப்பினும் பெண்கள் அதிக அளவில் ரேசன் கடைக்கு வருவதால், அனைவரின் பார்வையிலும் படும்படியாகஆணுறைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வைப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் ரேஷன் கடைகளில்ஆணுறை விற்பனை நடப்பது தெரியவில்லை.
இதையடுத்து அனைவரின் பார்வையிலும் படும்படியாக ஆணுறைகளை வைத்து விற்பனை செய்யுமாறு ரேஷன்கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப் போகிறோம்.
கடைகடைவிட மிகவும் குறைந்த விலையில்தான் ரேஷன் கடைகளில் ஆணுறைகள் விற்கப்படுகின்றன என்றார்












Click it and Unblock the Notifications