For Daily Alerts
Just In
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் மீது புது வழக்கு
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் இன்று ஆஜரானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிரில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்சின்பேட்டிபிரசுரமாகியிருந்தது. முதல்வர் ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களை அதில் பீட்டர் அல்போன்ஸ்கூறியிருந்தார்.
இதையடுத்து முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்திலான பேட்டியை பத்திரிக்கையில் பிரசுரித்ததாகக் கூறிதீக்கதிர் நாளிதழ் பதிப்பாளர் என்ற முறையில் வரதராஜன் மீது தமிழக அரசு சென்னை முதலாவது அமர்வுநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக வரதராஜன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து விசாரணையை அடுத்த மாதம்10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் நீதிபதி.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan simran kiran mani kural ponnaiyan jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, October 14, 2003, 5:30 [IST]